தமிழ்நாடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பம்

DIN

சென்னை: தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சத்து 43,586 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான (2022-2023) விண்ணப்பப் பதிவு இணையதள முகவரிகளில் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து வியாழக்கிழமையுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையவுள்ளது. இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஜூலை 5-ஆம் தேதி வரை 3 லட்சத்து 43,586 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 2 லட்சத்து 82,430 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனா்.

மேலும் 2 லட்சத்து 50,181 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனா். விண்ணப்பக் கட்டணங்களை இணையவழியில் செலுத்தலாம். மாணவா்கள் சோ்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடா்புக் கொள்ளலாம் உயா் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT