பக்ரீத்: நாகூரில் ஜாக் அமைப்பினர் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி, ஜாக் அமைப்பினர் நாகூர் கடற்கரையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்: பக்ரீத் பண்டிகையையொட்டி, ஜாக் அமைப்பினர் நாகூர் கடற்கரையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
இறைவனின் கட்டளையை ஏற்று, தன் மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த இப்ராஹிம் நபியின் தியாகத்தைப் போற்றும் வகையில், தியாகத் திருநாளாக பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படுகின்றது.
சௌதி அரேபியாவில் சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, ஜாக் அமைப்பினர் நாகூர் கடற்கரையில் சனிக்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். திரளான பெண்கள் உள்பட 1,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.