தமிழ்நாடு

அதிமுக அலுவலக கலவரம்: 3 தனிப் படைகள் அமைப்பு

அதிமுக அலுவலகத்திற்கு வெளியே ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

DIN


அதிமுக அலுவலகத்திற்கு வெளியே ஏற்பட்ட கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பொதுமக்களின் வாகனங்கள் மீது ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த வருவாய்த் துறையினர், தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

இரு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கலவரத்தில் ஈடுபட்ட 400 பேர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடியோ காட்சிகளை ஆராய்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக மயிலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையில் மூன்று தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதி யஷ்வந்த் வா்மா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

இந்த ஆண்டின் கோரமான காட்டுத்தீ! 27,000 ஏக்கர் காடு எரிந்து நாசம்! | France

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை!

எக்ஸில் இருப்பதுபோல... இன்ஸ்டாகிராமில் புதிய அம்சம்!

ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT