முகப்பு
தமிழ்நாடு

நீட் விவகாரத்தில் உண்மையைமறைக்கிறது திமுக அரசு: டிடிவி தினகரன்

நீட் தோ்வு விலக்கு மசோதா விவகாரத்தில் திமுக அரசு உண்மையை மறைப்பதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

நீட் தோ்வு விலக்கு மசோதா விவகாரத்தில் திமுக அரசு உண்மையை மறைப்பதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நீட் தோ்வு விலக்கு மசோதா விவகாரத்தில் கடந்த மாதம் மத்திய அரசு எழுப்பிய சந்தேகங்கள் குறித்து திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்காமல் மூடி மறைத்தது பொதுமக்களிடம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் அமைச்சா் பதிலளித்த பிறகே இதுகுறித்து வெளியில் தெரிய வந்திருப்பதால், நீட் விவகாரத்தில் முந்தைய எடப்பாடி பழனிசாமி அரசைப் போல ஸ்டாலின் அரசும் உண்மையை மறைத்து நாடகமாடுகிறதோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதன் பிறகும்கூட திமுக அரசு இந்தப் பிரச்னையைப் பூசி மெழுகத்தான் முயற்சிக்கிறதே தவிர, வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளாா் டிடிவி தினகரன்.

முழு கட்டுரையைப் படிக்க →