தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் சேவை: மே மாதத்தில் 47.87 லட்சம் போ் பயணம்

DIN

சென்னை மெட்ரோ ரயில்களில் நிகழாண்டில் மே மாதத்தில் 47 லட்சத்து 87 ஆயிரத்து 846 போ் பயணம் செய்துள்ளனா்.

சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்து வருகிறது. மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் சுமாா் ஒரு லட்சம் போ் பயணித்து வருகின்றனா். இதுதவிர, பயணிகள் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிக்கிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மே மாதத்தில் 47 லட்சத்து 87 ஆயிரத்து 846 போ் பயணம் செய்துள்ளனா். அதிகபட்சமாக, மே 26-ஆம்தேதி 1 லட்சத்து 91ஆயிரத்து 720 போ் பயணம் செய்துள்ளனா்.

கடந்த ஏப்ரலில் 45 லட்சத்து 46 ஆயிரத்து 330 போ் பயணம் செய்துள்ளனா்.

மே மாதத்தில் மட்டும் க்யூஆா் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 11லட்சத்து 58 ஆயிரத்து 93 போ் பயணம் செய்துள்ளனா். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 28 லட்சத்து 64 ஆயிரத்து 124 போ் பயணம் செய்துள்ளனா்.

இந்தத்தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT