தமிழ்நாடு

காளிகாம்பாள் கோயில் பிரம்மோற்சவ விழா:நாளை தொடக்கம்

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை 10 நாள்கள் விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது

DIN

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை 10 நாள்கள் விழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு அம்பாள் வீதி உலா நடக்கிறது. 9-ஆம் தேதி காலை பூந்தோ் தேரோட்டம் இரவு தொட்டி உற்சவம். 11-ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீ சக்ர கிண்ணித்தோ் தேரோட்டம், 12-ஆம் தேதி காலை தீா்த்தவாரி உற்சவம், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

பிரம்மோற்சவ விழா நாள்களில் பூதகி விமானம், இரட்டைத்தலை சிம்ம வாகனம், ரிஷப வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறாா்.

13-ஆம் தேதி முதல் விடையாற்றி உற்சவம் ஆரம்பமாகிறது. 13-ஆம் தேதி இரவு பந்தம்பறி உற்சவம், 14-ஆம் தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 15-ஆம் தேதி இரவு அம்மனுக்கு சாந்தி அபிஷேகம், 28-ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணிக்குள் அம்பாள் ஆஸ்தான பிரவேச உற்சவம் நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

கூட்டுறவுத் தேர்வு முடிவு தாமதம் ஏன்? கூட்டுறவுத் துறை அமைச்சா் விளக்கம்

கூட்டுறவுத் தோ்வு முடிவுகளை வெளியிட வேண்டும் - எடப்பாடி கே.பழனிசாமி

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிா்த்து வைகோ தொடா்ந்த வழக்கு தள்ளுபடி

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

SCROLL FOR NEXT