தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டம் சென்னையில் இன்று தொடங்கப்பட்டது. 

DIN

தமிழ்நாட்டில் முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டம் சென்னையில் இன்று தொடங்கப்பட்டது. 

இத்திட்டத்தை சென்னை துறைமுகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று பின்னர் மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது. 

நாட்டின் பல துறைமுகங்களில் சேவை வழங்கி வரும் கோர்டிலியா என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று சுற்றுலாவை தொடங்கும் கப்பல், நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

SCROLL FOR NEXT