திருப்புவனத்தில் திமுக சார்பில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயம். 
தமிழ்நாடு

திருப்புவனத்தில் திமுக சார்பில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றிய நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக மாபெரும் மாட்டு வண்டிப் பந்தயம்  நடத்தப்பட்டது.

DIN


 
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றிய நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல்முறையாக மாபெரும் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்தப்பட்டது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன கொடியசைத்து மாட்டு வண்டிப் பந்தயத்ததை தொடங்கி வைத்தார். இப்போட்டி பெரியமாடு, சிறியமாடு பூஞ்சிட்டு மாடு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. 

பந்தயம் தொடங்கி வைக்கப்பட்டதும் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன. பந்தயம் நடைபெற்ற சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கூடிநின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர். 

மாட்டு வண்டிப் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கிய சட்டப்பேரவைஉறுப்பினர் தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், நகர் மன்றத் தலைவர் மாரியப்பன்ககென்னடி.

அதைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் வண்டிகளை ஓட்டிச் சென்ற அதன் சாரதிகளுக்கும் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை நகர் மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோர் ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.  

பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் முதல் பரிசாக மானாமதுரை நகர்மன்றத் தலைவர் மாரியப்பன் கென்னடி சார்பில் ரூ 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. திருப்புவனம ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூரில் விஜய் பிரசாரம்! பாதுகாப்பில் கவனம் செலுத்தும் தவெக!

எப்ஸ்டீன் கோப்புகள்! எலிசபெத் ராணியின் மகன் ஆண்ட்ரூ கைது!

சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணியின் டாப் ஆர்டரை அச்சுறுத்தும் எதிரணிகள்!

வீட்டிற்குள் நுழைய முயன்ற யானை! மின் விளக்கு எரிந்ததும் பின்வாங்கியது!

33 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கிடைத்த உலகக் கோப்பை..! 2012 ரீவைண்ட்!

SCROLL FOR NEXT