தமிழ்நாடு

சென்னையில் 400-ஐ நெருங்கும் தினசரி கரோனா பாதிப்பு

DIN

சென்னையில் ஒருநாள் கரோனா நோய்த் தொற்று 400-ஐ நெருங்கியதால், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மூன்றாம் அலைக்கு பிறகு கடந்த இரு வாரங்களாக மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 737 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று 294 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 383 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், செங்கல்பட்டில் 128, திருவள்ளூர் 49, கோவை 42 பேருக்கு அதிகபட்சமாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விரைவில் கரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT