தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.59.26 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN


கொழும்பிலிருந்து சென்னைக்கும் விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.59.26 லட்சம் மதிப்புள்ள 1.275 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கொழும்பிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த ஃபாத்திமா ரிஃபாயா, ஃபாத்திமா நவியா, ஃபாத்திமா அஃப்ரா ஆகிய மூன்று பெண் பயணிகளை வழிமறித்து அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். 

அப்போது 3 பயணிகளும் தங்களது உள்ளாடை மற்றும் ஹேர் பேண்டுகளில் பசை வடிவில் மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது.

இதையடுத்து மொத்தம் சுமார் 1.275 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.59.26 லட்சம் ஆகும்.

இந்த கடத்தல் தங்கம் தொடர்பாக ஃபாத்திமா ரிஃபாயா என்ற பயணி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT