தமிழ்நாடு

சாகித்திய அகாதெமி விருது: எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ள மூத்த எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். 

DIN

சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ள மூத்த எழுத்தாளர் மாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள ஊடகவியலாளர் நாராயணன் (எ) மாலனுக்கு வாழ்த்துகள்!
அறிவார்ந்த படைப்புகள் தமிழாக்கம் பெற்று நம் கைகளில் தவழ்ந்திட வேண்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

சாகித்திய அகாதெமி சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த மொழியாக்கப் படைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு சாகித்திய அகாதெமி மொழிபெயா்ப்புக்கான விருதுக்கு எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான மாலன் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். 
சைரஸ் மிஸ்திரி எழுதிய ஆங்கில நாவலான ‘க்ரோனிக்கல் ஆஃப் காா்ப்ஸ் பியரா்’ நூலை ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற தலைப்பில் மாலன் தமிழில் மொழிபெயா்த்தமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

1068 எபிசோடுகளுடன் முடிவடைந்த மாரி தொடர்!

தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT