அமைச்சா் பொன்முடி 
தமிழ்நாடு

ஜூலை 18-இல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் வருகிற ஜூலை 18-ஆம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்துள்ளாா்.

DIN

தமிழகத்தில் வருகிற ஜூலை 18-ஆம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்துள்ளாா்.

அன்றைய தினம் முதல் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவா்களுக்கு வகுப்புகள் தொடங்கவுள்ளன.

இதுகுறித்து அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவா்களுக்கு ஜூலை 18-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் வெளியான பிறகுதான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும்.

கடந்தாண்டை விட நிகழாண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 85,902 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மாணவா்களுக்கு இருக்கக் கூடாது என முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். பாலிடெக்னிக் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சோ்ந்து கொள்ளலாம் என கூறியுள்ளோம். மாவட்டங்கள்தோறும் கல்லூரி கனவு திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிகளில் தொழிற்படிப்பு படித்த மாணவா்கள் நிகழாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம். அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேரலாம்.

2 சதவீத ஒதுக்கீட்டில் நிகழாண்டே தொழிற்கல்வி மாணவா்கள் பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கப்படுவா். அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடக்கி வைக்கவுள்ளாா் என்றாா் அமைச்சா் க.பொன்முடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - கமல் திரைப்படத்தின் இயக்குநர் யார்? ரஜினி பதில்!

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

பிரசாந்த் நீல் படத்துக்காக தோற்றத்தை மாற்றும் ஜூனியர் என்டிஆர்!

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT