தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வியாழக்கிழமை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.