சென்னை: அரசு வேலைகளில் 3-ம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசாணைகளை தாக்கல் செய்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. மேலும் அரசு வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.
3-ம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரி சுதா என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்துள்ளது.
தமிழக அரசு அரசாணைகளை தாக்கல் செய்ததையடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.