தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுடன் முதல்வர் நாளை(மார்ச்-3) ஆலோசனை

DIN

மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் நாளை( மார்ச்-3) முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்-3) காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  காவல்கண்காணிப்பார்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். 

தமிழகத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது, சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் கேட்டறிவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

பின், மார்ச்-5 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கிறது. 

தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையடுத்து அதுகுறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. 

மார்ச் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், பட்ஜெட்டில் அறிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்குதல்  உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT