தமிழ்நாடு

பளுதூக்கும் போட்டி: சிறப்பிடம் பெற்ற அருப்புக்கோட்டை பள்ளி மாணவிக்குப் பாராட்டு

DIN

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி வி.தாமரை புஷ்பம், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டியில் முதல் பரிசை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார். 

விருதுநகர் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான பளுதூக்கும் போட்டி இறுதிப் போட்டிகள்  விருதுநகர் செந்தில்குமார் கல்லூரியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 11ம் வகுப்பு மாணவி வி.தாமரை புஷ்பம், தனது வயதுப்பிரிவில் முதல்பரிசை வென்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

அம்மாணவி வி.தாமரை புஷ்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.தங்கரதி மற்றும் உறவின் முறைப் பெரியோர்களும், பள்ளியின் பிற ஆசிரியப் பெருமக்களும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT