தமிழ்நாடு

மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்: மானியமாக ரூ. 1,520 கோடி ஒதுக்கீடு

DIN

தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு 5,375.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

போக்குவரத்துத் துறை அறிவிப்புகள்:

முதல்வரால் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தினால் மகளிர் பயணிகளின் பங்கு 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்திட்டம், பெண்களின் சமூக, பொருளாதார நிலையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரவு செலவுத்திட்டத்தில், மகளிருக்கு இலவச பேருந்துப் பயண மானியமாக 1,520 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்துப் பயணக் கட்டணச் சலுகை மானியமாக 928 கோடி ரூபாயும், டீசல் மானியமாக 1,300 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது.

KfW என்ற ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பேருந்து சேவைகளை காலநிலைக்கு ஏற்ற நவீனமயமாக்கல் திட்டத்தில் 2,213 BS VI புதிய டீசல் பேருந்துகளும், 500 புதிய மின்-பேருந்துகளும் (e-bus) கொள்முதல் செய்யப்படும்.

இதற்காக போக்குவரத்துத் துறைக்கு 5,375.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

SCROLL FOR NEXT