திருப்பூரில் யானைத் தந்தம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்த வனத்துறையினர். 
தமிழ்நாடு

திருப்பூரில் யானைத் தந்தம் விற்பனை செய்ய முயன்ற 3 பேர் கைது

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

DIN

திருப்பூர்: திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் யானைத் தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் யானைத் தந்தங்களை வைத்து விற்பனைக்காக சிலர் பேரம் பேசி வருவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 

இந்தத் தகவலின்பேரில் திருப்பூர் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது அங்கு 4 துண்டுகளாக யானைத் தந்தங்களை வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, அந்தத் தந்தங்களை பறிமுதல் செய்ததுடன், கடத்தலுக்குப்  பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 
இதுதொடர்பாக வெள்ளியங்காட்டைச் சேர்ந்த வீரப்பன்(65), முருகன்(45), அவிநாசியைச் சேர்ந்த அவிநாசியப்பன் (40) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 2 யானைத் தந்தங்களின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

ஜல்லிக்கட்டு வா்ணனையாளா்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிக்கை

10, 12 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு! முழு விவரம்!

எனது தலைமையிலான அமர்வு விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை! தலைமை நீதிபதி

SCROLL FOR NEXT