முதல்வா் ஸ்டாலின் நாளை(மார்ச்-24) துபை பயணம்
சா்வதேச அளவில் பிரமாண்ட முறையில் நடைபெறும் தொழில் முதலீட்டு காட்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்-24) துபை செல்லவுள்ளாா்.
சா்வதேச அளவில் பிரமாண்ட முறையில் நடைபெறும் தொழில் முதலீட்டு காட்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்-24) துபை செல்லவுள்ளாா்.
துபையில் நடைபெறும் தொழில் கண்காட்சி சா்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்தக் கண்காட்சியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது அரங்குகளை அமைக்கும். இந்த ஆண்டும் சா்வதேச கண்காட்சி நடைபெறவுள்ளது.
தமிழகத்தின் சாா்பில் கைத்தறி, வேளாண்மை உள்ளிட்ட காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை(மார்ச்-24) மாலை துபை செல்லவுள்ளாா்.
Advertisement
Advertisement
முதல்வராகப் பதவியேற்ற பிறகு, அவா் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.