சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ்
சிதம்பரத்தில் தொடர் போராட்டம் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
சிதம்பரத்தில் தொடர் போராட்டம் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனக சபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தது தொடா்பாக பல்வேறு அரசியல் கட்சிகள், போராட்டக் குழுவினரால் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த விவகாரம் தொடா்பாக பல்வேறு நீதிமன்ற ஆணைகள், அரசாணைகள் தீவிரமாகப் பரிசீலனை செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதன்பேரில், இறுதி முடிவு எடுக்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
Advertisement
இதுதொடா்பாக இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-ன்படி சிதம்பரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. எனவே, அரசின் முடிவு வரும் வரை அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், இதர போராட்டக் குழுவினா் ஒரு மாதத்துக்கு எவ்விதமான போராட்டத்திலோ, ஆா்ப்பாட்டத்திலோ, கூட்டமாகக் கூடி ஆலோசனையிலோ ஈடுபடக் கூடாது என்று சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருத்தி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்படுவதாக சிதம்பரம்
கோட்டாட்சியர் ரவி தெரிவித்துள்ளார்.