கோப்பிலிருந்து.. 
தமிழ்நாடு

இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி: அரசாணை பிறப்பிப்பு

தமிழகத்தில் இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதற்கான அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

DIN


சென்னை: தமிழகத்தில் இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதற்கான அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசின் இந்த அரசாணை மூலம், விஷமுள்ள பாம்புகளை பிடிக்க, இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு முறையான அனுமதி கிடைத்துள்ளது.

பாம்புகளை பிடிக்க இருளர் இன மக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்காததால், உலகளவில் புகழ்பெற்ற இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

விஷ முறிவு மருந்துகள் மற்றும் பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்க கடுமையான விஷமுள்ள நாகம், கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் போன்ற பாம்புகளை இருளர் இன மக்கள் பிடித்துக் கொடுத்து வந்தனர். இதற்கு அனுமதி கிடைக்காததால், விஷ முறிவு மருந்து தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், விஷமுறிவு மருந்துக்கான விஷமுள்ள பாம்புகளை பிடிக்க, இருளர் இன மக்களுக்கு தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த தங்கம் விலை!

ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

வெளிச்சப் பூவே... வாமிகா கேபி!

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

SCROLL FOR NEXT