தமிழ்நாடு

இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி: அரசாணை பிறப்பிப்பு

DIN


சென்னை: தமிழகத்தில் இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதற்கான அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

தமிழக அரசின் இந்த அரசாணை மூலம், விஷமுள்ள பாம்புகளை பிடிக்க, இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு முறையான அனுமதி கிடைத்துள்ளது.

பாம்புகளை பிடிக்க இருளர் இன மக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்காததால், உலகளவில் புகழ்பெற்ற இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

விஷ முறிவு மருந்துகள் மற்றும் பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்க கடுமையான விஷமுள்ள நாகம், கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் போன்ற பாம்புகளை இருளர் இன மக்கள் பிடித்துக் கொடுத்து வந்தனர். இதற்கு அனுமதி கிடைக்காததால், விஷ முறிவு மருந்து தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், விஷமுறிவு மருந்துக்கான விஷமுள்ள பாம்புகளை பிடிக்க, இருளர் இன மக்களுக்கு தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT