தமிழக பள்ளிக்கல்வித்துறை 
தமிழ்நாடு

‘கல்விக் கட்டணத்திற்காக ஹால் டிக்கெட் தர மறுக்கக் கூடாது’: பள்ளிக்கல்வித் துறை

கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்காமல் நிறுத்தி வைத்தால் பள்ளி நிர்வாகமே பொறுப்பு என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

DIN

கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்காமல் நிறுத்தி வைத்தால் பள்ளி நிர்வாகமே பொறுப்பு என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மே 5; பத்தாம் வகுப்புக்கு மே 6; பிளஸ் 1 வகுப்புக்கு மே 10-ஆம் தேதி அரசு பொதுத் தோ்வுகள் தொடங்கவுள்ளன. பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைஅந்தந்த பள்ளிகளே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.

இந்நிலையில், சில தனியாா் பள்ளிகளில், கல்விக் கட்டண நிலுவை காரணமாக, சம்பந்தப்பட்ட மாணவா்கள் தோ்வில் பங்கேற்க முடியாதவாறு தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை தராமல் நிறுத்தி வைப்பதாக புகாா்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில்,

கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்க பள்ளிகள் மறுக்கக்கூடாது. நுழைவுச் சீட்டு வழங்க மறுத்தால், சமந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT