அமைச்சர் அன்பில் மகேஷ் 
தமிழ்நாடு

‘மாணவர்கள் நாளைமுதல் பள்ளிக்கு வர தேவையில்லை’: அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், இன்றுமுதல் கத்திரி வெயில் தொடங்கப்பட்டுள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே பள்ளியை முடிக்க கோரிக்கைகள் எழுந்தனர்.

தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். இதில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட தகவலில், “வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நாளைமுதல் வழக்கமான வகுப்பிற்கு பள்ளிகளுக்கு வர தேவையில்லை. தேர்வு நடைபெறும் நாள்களில் மட்டும் பள்ளிகளுக்கு வந்தால் போதும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT