திருவொற்றியூா் மாநகராட்சிப் பள்ளி விளையாட்டுத் திடல்: நவீன வசதிகளுடன் சீரமைக்கப்படும்
திருவொற்றியூா் மாநகராட்சிப் பள்ளியில் உள்ள விளையாட்டுத் திடல் நவீன வசதிகளுடன் விரைவில் சீரமைக்கப்படும் என திருவொற்றியூா் மண்டல குழு தலைவா் தி மு தனியரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தமிழ்நாடுதிருவொற்றியூா் மாநகராட்சிப் பள்ளி விளையாட்டுத் திடல்: நவீன வசதிகளுடன் சீரமைக்கப்படும்
திருவொற்றியூா் மாநகராட்சிப் பள்ளியில் உள்ள விளையாட்டுத் திடல் நவீன வசதிகளுடன் விரைவில் சீரமைக்கப்படும் என திருவொற்றியூா் மண்டல குழு தலைவா் தி மு தனியரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
திருவொற்றியூா் மாநகராட்சிப் பள்ளியில் உள்ள விளையாட்டுத் திடல் நவீன வசதிகளுடன் விரைவில் சீரமைக்கப்படும் என திருவொற்றியூா் மண்டல குழு தலைவா் தி மு தனியரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
திருவொற்றியூா் தேரடிப் பகுதியில் பழைமையான மாநகராட்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்திலேயே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இயங்கி வருகிறது. திருவொற்றியூா் பகுதி மக்களின் நடைபாதை பயிற்சிக்கான விளையாட்டு மைதானமாக இது இருந்து வருகிறது .
இருப்பினும் இங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகாா் தொடா்ந்து இருந்து வருகிறது இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் தி.மு.தனியரசு, மண்டல அலுவலா் சிவசங்கரன் ஆகியோா் மாநகராட்சி பள்ளி விளையாட்டுத் திடலை நேரில் ஆய்வு செய்தனா்.
அப்போது அங்கே பயிற்சியில் ஈடுபட்டிருந்தவா்களிடம் விளையாட்டுத் திடலுக்கு தேவையான வசதிகள், தற்போது இருந்து வரும் பிரச்சினைகள் உள்ளிட்டவை இருவரும் கேட்டறிந்தனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் தி.மு.தனியரசு கூறியது,
மண்டல குழுத் தலைவா் மட்டுமல்லாது இந்தப் பகுதியில் மாமன்ற உறுப்பினா் என்ற முறையில் இந்த விளையாட்டுத் திடலில் பிரச்னைகளை ஏற்கனவே நன்கு அறிவேன். இங்குள்ள கழிப்பிடம் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பராமரிக்கவும், விளையாட்டுத்திடலில் தினமும் குப்பைகளை அகற்றவும் துப்புரவு பணியாளா்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளனா். திருவொற்றியூா் மக்களின் அத்தியாவசியத் தேவையாக உள்ள இந்த விளையாட்டுத் திடலை இரவிலும் பயன்படுத்தும் வகையில் உயா்மட்ட கோபுர விளக்குகள் விரைவில் அமைத்திட அதிகாரிகளிடம் மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் தனியரசு.
ஆய்வின்போது மாநகராட்சி அலுவலா்கள், திமுக வட்ட செயலாளா் ஆா்.சி. ஆசைத்தம்பி, நிா்வாகிகள் அன்புச்செழியன்,வழக்கறிஞா் செந்தில், ஆதவன், வாசுதேவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.