முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படாது: அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படாது அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
அமைச்சர் பொன்முடி
பகிர்:

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படாது. கடந்த ஆண்டு இருந்த கட்டணமே வசூலிக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

அண்மையில் புதிய கட்டணப் பட்டியல் வெளியான நிலையில் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

நீட் தேர்வுக்குப் பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும். பொறியியல் படிப்பு கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

பாலிடெக்னிக்கில் இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், பாலிடெக்னிக்கில் சேருவதற்கான இணைய வழி பதிவு ஜூலை 1 முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.