கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் குட்கா பொருள்களுக்கு மேலும் ஓராண்டு தடை

தமிழகத்தில் குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்க்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு விதிக்க்கப்பட்ட தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய  குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களுக்கு தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை கடந்த மே 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் ஓராண்டுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, குட்கா, புகையிலை, பான் மசாலா ஆகிய பொருள்களை தயாரித்தல், விநியோகித்தல், பதுக்கி வைப்பது குற்றமாகும். 

கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

மகளிர் உலகக் கோப்பைக்கான ஐசிசி அணியில் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா, தீப்திக்கு இடம்!

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

SCROLL FOR NEXT