தமிழ்நாடு

குன்னூர் ராணுவ வெடிமருந்து ஆலையில் வெடி விபத்து

குன்னூர் ராணுவ வெடி மருந்து ஆலையில் இன்று அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 

DIN

குன்னூர் ராணுவ வெடி மருந்து ஆலையில் இன்று அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காட்டில் உள்ள ராணுவ வெடிமருந்து ஆலையில் இந்திய ராணுவத்திற்குத் தேவையான வெடிமருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த 8 ஊழியர்களும் வேகமாக ஓடியதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சிலருக்கு லேசான உராய்வு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளன. 

விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தையடுத்து அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT