அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அதிமுகவின் கட்சி விதிகளை மீறியது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தெரிவித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும், ஆவணங்களையும் நவ.30-ல் தாக்கல் செய்ய வலியுறுத்தி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரரின் ஆதார் எண்ணை இணைக்கலாமா?
வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பும், அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும் கோரிய நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.