அதிமுக பொதுக்குழு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 30 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சுதான் சூ துலியா அமர்வில் விசாரணை நடைபெற்றது.
அதிமுகவின் கட்சி விதிகளை மீறியது உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தெரிவித்தது.
Advertisement
Advertisement
அனைத்து தரப்பு வாதங்களையும், ஆவணங்களையும் நவ.30-ல் தாக்கல் செய்ய வலியுறுத்தி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மின் இணைப்பு எண்ணுடன் வாடகைதாரரின் ஆதார் எண்ணை இணைக்கலாமா?
வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என இபிஎஸ் தரப்பும், அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பும் கோரிய நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.