தமிழ்நாடு

கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டர்பைன் பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

DIN

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் டர்பைன் பழுது காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டாவது அணு உலையில் டர்பைன் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அணு உலையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

முதலாவது அணு உலையில் மட்டும் தற்போது 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT