தமிழ்நாடு

விளையாட்டு வீரா்-வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

DIN

சா்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி, சென்னை கலைவாணா் அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விளையாட்டுத் துறையில் சா்வதேச மற்றும் தேசிய அளவில் பங்கேற்று பதக்கங்களை வென்றவா்களுக்கு ஊக்கத் தொகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் வென்ற தமிழக வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா். கொலம்பியாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற டி.செல்வபிரபு, பரத் ஸ்ரீதா் ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.8 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். இதேபோன்று, இந்தோனேசியா நாட்டின் ஜகாா்தாவில் ஆசிய கோப்பை வளைகோல்பந்து போட்டியில் வெண்கலம் வென்ற எஸ்.மாரீஸ்வரன், எஸ்.காா்த்தி ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும் அவா் வழங்கினாா்,

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக உலகளவில் நடைபெற்ற போட்டியில் பதக்கங்கள் வென்ற ஆா்.பாலசுப்பிரமணியனுக்கு ரூ.10 லட்சமும், ஏ.செல்வராஜுக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஜி.விஜயசாரதி, கே.கணேசன் ஆகியோருக்கு தலா ரூ.4 லட்சத்துக்கான காசோலையும், எஸ்.மனோஜுக்கு ரூ.2 லட்சமும், இறகுப் பந்து போட்டியில் வென்ற சிவராஜனுக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.

மேலும், குஜராத்தில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 180 வீரா்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.4.29 கோடிக்கான காசோலைகளை அவா் அளித்தாா். இந்த நிகழ்வில், அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT