தமிழ்நாடு

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலுக்கு திடீர் பூட்டு!

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோவிலுக்கு திடீரென பூட்டு பூட்டப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

DIN

காஞ்சிபுரம் தும்பவனத்தம்மன் கோயிலுக்கு திடீரென பூட்டு பூட்டப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகர் விஷ்ணுகாஞ்சி பகுதியில் உள்ளது தும்பவனத்து அம்மன் கோயில் . இத்திருக்கோயிலில் உள்ள தும்பவனத்தம்மன் பலருக்கும் குல தெய்வமாக உள்ளது. திருக்கோயிலில் இன்று சாமி கும்பிட வந்த பக்தர்கள் திடீரென கோயிலில் இரண்டு பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி அடைந்தனர்.

சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் சுமார் 4 மணி நேரமாக கோயில் முன்பாக காத்திருந்தனர். இது குறித்து திருக்கோயில் நிர்வாகிகளில் ஒருவரான குணசீலன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நான்கு மணி நேரம் ஆகியும் காவல்துறையினர் அல்லது அறநிலையத்துறையினரோ வராமல், சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக பக்தர்கள் நீண்ட நேரம் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் கோயிலுக்கு முன்பாகவே காத்திருந்தனர். 

இதை குறித்து அறநிலையதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தான் திருக்கோயில் நிர்வாகம் மாற்றப்பட்டு அவர்கள் கோயில் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

எனவே விரைவில் அதிகாரிகள் வந்து திருக்கோயிலிலை திறந்து பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்றார்கள். ஆனால் நான்கு மணி நேரம் ஆகியும் காவல்துறையினரோ, அறநிலையத்துறையினரோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

SCROLL FOR NEXT