விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதால் இன்றைய நாளில் கல்வி கலைகளை கற்கத் தொடங்குகின்றனர்.
விஜயதசமி முன்னிட்டு சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஷோபனா அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஐயப்பன் மேல் சாதத்தில் கிருஷ்ணா நம்பூதிரி குழந்தையின் நாவில் ஹரி ஸ்ரீ கணபதியே நமஹா என எழுதியும் பச்சரியில் முதல் எழுத்தை குழந்தையின் விரலை பிடித்து எழுதியும் தொடங்கி வைத்தார்.
குழந்தையின் நாவில் ஹரி ஸ்ரீ கணபதியே நமஹா என எழுதும் கிருஷ்ணா நம்பூதிரி
மழையில் குழந்தையுடன் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பெற்றோர்கள்.