தமிழ்நாடு

அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா?

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

DIN



தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு சார்பில் கல்வி, வேளாண்மை, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலே மக்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அரசு அறிவித்துள்ள அனைத்து சிறப்புப் திட்டங்களும் மக்களைச் சென்றடைந்துள்ளதா என்பது குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்வதற்காக 30 அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிக்க | ‘இஞ்சி டீ’ குடல்வாழ் கிருமிகளைக் காக்குமா?  
 
இவர்கள் சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள், தரவுகள் குறித்து மாவட்ட வாரியாக கண்காணிப்பு செய்து ஆராய வேண்டும். 

மேலும், மாதத்தில் நான்கு நாள்கள் கள ஆய்வு செய்ய வேண்டும். அரசின் திட்டங்கள் உரிய பயனாளர்களை சென்றடைந்ததா, திட்டங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றதா என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்! விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!

இது தெரியுமா? வெய்யிலில் இருந்து நிழலுக்கு வரும்போது கண்கள் இருட்டுவது ஏன்?

அண்ணாவின் அறிவுத் தீ பரவட்டும்!

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

SCROLL FOR NEXT