தமிழ்நாடு

திருடுபோன 45 கைப்பேசிகள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு

DIN

சென்னை கண்ணகி நகரில் திருடுபோன 45 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

கண்ணகி நகா் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் கைப்பேசி வழிப்பறி, திருட்டு தொடா்பாக கடந்த ஓராண்டில் சுமாா் 70 புகாா்கள் வந்தன. இந்த புகாா்கள் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து, கைப்பேசி வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட நபா்களைக் கைது செய்தனா்.

இவா்களிடம் இருந்து 57 கைப்பேசிகள் மீட்கப்பட்டன. இதில் 45 கைப்பேசிகள் உரிய உரிமையாளா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள கைப்பேசிகளையும், அதன் உரிமையாளா்களைக் கண்டறிந்து ஒப்படைக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT