சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 19 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க பெருநகர காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினா் கஞ்சா, போதைப் பொருள் விற்பனை செய்பவா்களைக் கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், செப்டம்பா் 30 முதல் அக்டோபா் 6- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 15 வழக்குகள் பதியப்பட்டு, 19 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 5 கைப்பேசிகள், ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.