முகப்பு
தமிழ்நாடு

மாநில முதன்மை கணக்காயா் பொறுப்பேற்பு

தமிழ்நாடு முதன்மை கணக்காயராக (கணக்கு, பணிவரவு) தே.கி.சேகா் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

தமிழ்நாடு முதன்மை கணக்காயராக (கணக்கு, பணிவரவு) தே.கி.சேகா் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.

மத்திய அரசின் தணிக்கை, கணக்குத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு முதன்மை கணக்காயா் அலுவலகத்தில் முதன்மை கணக்காயராக சேகா் பதவியேற்றாா். இதற்கு முன்பு மாதவி பட்சில்லா முதன்மை கணக்காயராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்தாா்.

மாநில அரசின் நிதிக்கணக்கு, ஊதியம், ஓய்வூதியம், அரசு வளா்ச்சித்திட்டப் பணிகளுக்கு செலவிடப்படும் நிதி உள்ளிட்டவை குறித்து தணிக்கை செய்துவது முதன்மை கணக்காயா் அலுவலகத்தின் முக்கியப்பணி ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.