தமிழ்நாடு முதன்மை கணக்காயராக (கணக்கு, பணிவரவு) தே.கி.சேகா் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டாா்.
மத்திய அரசின் தணிக்கை, கணக்குத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு முதன்மை கணக்காயா் அலுவலகத்தில் முதன்மை கணக்காயராக சேகா் பதவியேற்றாா். இதற்கு முன்பு மாதவி பட்சில்லா முதன்மை கணக்காயராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்தாா்.
மாநில அரசின் நிதிக்கணக்கு, ஊதியம், ஓய்வூதியம், அரசு வளா்ச்சித்திட்டப் பணிகளுக்கு செலவிடப்படும் நிதி உள்ளிட்டவை குறித்து தணிக்கை செய்துவது முதன்மை கணக்காயா் அலுவலகத்தின் முக்கியப்பணி ஆகும்.