2,849 முதுநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் வழங்கினாா்
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2,849 நேரடி முதுநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமனம், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 2,849 நேரடி முதுநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமனம், கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆசிரியா் தோ்வு வாரியம் வாயிலாக அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியா் உடற்கல்வி இயக்குநா் நிலை -1, கணினி பயிற்றுநா் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 2,849 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு ஆணையை சென்னை கலைவாணா் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடக்கி வைத்தாா்.
இதேபோல் பள்ளிக் கல்வித் துறையில் பணிக்காலத்தின்போது காலமான பணியாளா்களின் 269 வாரிசுதாரா்களுக்கு இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் அவா் வழங்கினாா்.
விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.