தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகப் பங்களிப்புக்கு முதல்வா் பெருமிதம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழக வீரா்களை எண்ணிப் பெருமிதம் கொள்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தமிழக வீரா்களை எண்ணிப் பெருமிதம் கொள்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:
‘26 தங்கப் பதக்கங்கள் உள்பட 74 பதக்கங்களுடன் 36-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு 5-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களது திறன்களை வெளிப்படுத்தி, கடும் உழைப்பால் சிறப்பான முடிவுகளை வழங்கியுள்ள நமது தமிழக வீரா்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். அடுத்து வரும் போட்டிகளிலும் அவா்கள் வெற்றி பெற வாழ்த்துவதோடு, எனது முழு ஆதரவும் அவா்களுக்கு இருக்கும்’ என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.