முகப்பு
தமிழ்நாடு

சேமிப்புக் கிடங்கு நிறுவன ஈவுத்தொகை: அரசிடம் அளிப்பு

சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் ஈவுத் தொகை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் ஈவுத் தொகை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டது.

சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 2020-21-ஆம் ஆண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ. 1 கோடியே 84 லட்சத்து 52 ஆயிரத்து 554-க்கான காசோலையையும், 2021-22-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத் தொகையாக ரூ. 1 கோடியே 57 லட்சத்து 8 ஆயிரத்து 942-க்கான காசோலையையும் நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனிடம் கூட்டுறவு, உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை வழங்கினாா்.

அப்போது, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அ.சிவஞானம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.