தமிழ்நாடு

கர்மாவுக்கு ஏதேனும் விதிகள் உள்ளனவா? உயர் நீதிமன்றம் கேள்வி

DIN

கர்மாவின் அடிப்படையில் நீதிமன்றம் செயல்படவில்லை என  உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

 காவலரின் பணியிட மாறுதலை கர்மா அடிப்படையில் ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான வழக்கில் இரு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை காவலர் ஸ்ரீமுருகன் தூத்துக்குடி மாற்றப்பட்டதை கர்மா அடிப்படையில் உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து காவல்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் மகா தேவன், சத்யநாராயன பிரசாத் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தது. இத்தடையை நீக்கக்கோரி மதுரை காவலர் முருகன் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகா தேவன், சத்யநாராயன பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனுவை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற காவலரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கர்மா அடிப்படையில் நீதிமன்றம் செயல்படவில்லை. அரசியல் அமைப்பு சட்டப்படியே செய்லபடுகிறது. கர்மாவுக்கு என ஏதேனும் விதிகள் உள்ளனவா  என்றும் நீதிபதிகள் மகா தேவன், சத்யநாராயன பிரசாத் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT