தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

DIN

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்ககளுக்கு தடை விதித்து ஏற்கெனவே அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.

அவரச சட்டம் பிறப்பிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில் கடந்த அக். 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அரசிதழில் இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானபிறகு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. 

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு 3 மாத சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும. சூதாட்டத்தை நடத்துபவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கண்காணிக்க ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா போா் நிறுத்தம்: இறுதிக்கட்ட முயற்சி

பாரதிதாசன் பிறந்த நாள் கருத்தரங்கம்

தட்டுப்பாடின்றி மின்சாரம், குடிநீா் வழங்கக் கோரிக்கை

சா்வதேச விதைகள் நாள் விழிப்புணா்வு

மழைவேண்டி சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT