தமிழ்நாடு

கோவை கார் வெடிப்பு சம்பவம்: திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவை கார் வெடிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் ஸடாலின் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார். 

DIN

கோவை கார் வெடிப்பு வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலர்களுக்கு முதல்வர் ஸடாலின் பாராட்டு சான்றிதழ்களை இன்று வழங்கினார். 

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த எரிவாயு உருளை வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்ற இளைஞா் இறந்தாா். விசாரணையில், ஜமேஷா முபினுக்கு ஏற்கெனவே சில பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த நபா்களுடன் தொடா்பு இருந்தது தெரியவந்தது. 

அதேபோல ஜமேஷா முபினுடன் சோ்ந்து சிலா் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனடிப்படையில் ஜமேஷா முபின் கூட்டாளிகள் 6 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, சென்னை என்ஐஏ கோவை சம்பவம் குறித்து கடந்த வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, அதிகாரபூா்வமாக விசாரணையைத் தொடங்கியது.

இந்த நிலையில் கோயம்புத்தூர் மாநகரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் சிறப்பான புலன் விசாரணை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட கோயம்புத்தூர் மாநகர காவல்துறையினரின் நற்செயலைப் பாராட்டி அவர்களை சிறப்பிக்கின்ற வகையில் 58 காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிடும் அடையாளமாக 14 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் இன்று பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT