தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயில் அறங்காவலர்கள் பதவியேற்பு!

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் புதிய அறங்காவலர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.        

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய அறங்காவலர்கள் தேர்வு வியாழக்கிழமை காலை திருக்கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில், இணை ஆணையர் (கூ.பொ) ம. அன்புமணி முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக செந்தில்முருகன், அனிதா குமரன், ராமதாஸ், அருள்முருகன், கணேசன் ஆகிய ஐந்து பேர் பதவியேற்று கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடி உதவியாளர் தி.சங்கர் முன்னிலையில் நடைபெற்ற தேர்வில் அறங்காவலர் குழு தலைவராக ரா. அருள்முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் தலைவர் பதவியேற்றுக்கொண்டார். 

கூடுதல் ஆணையர் கண்ணன், உள்ளிட்ட அறநிலையத்துறையினர், திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் சால்வே அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT