தமிழ்நாடு

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி ?

தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.  

DIN

தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வின் முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியானது. அகில இந்திய அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏராளமான அரசு பள்ளி மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெறவில்லை என தகவல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 17,972 பேர் தேர்வெழுத பதிவு செய்ய நிலையில் 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

அதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரையில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி பெற்றனர். குறைந்தபட்சமாக திருபத்தூர் மாவட்டத்தில் இருந்து நீர் தேர்வு எழுதிய 7%பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை நீட் தேர்வு எழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக தேர்தல் அறிக்கையில் பரிந்துரை வழங்க புதிய இணையதளம் அறிமுகம்!

“காங்கிரஸ் செய்த தவறுகளை திருத்துவதிலேயே அதிக நேரம் செலவிடுகிறோம்”.. பிரதமர் மோடி!

நிகழ மறுத்த அற்புதம்..! பரிபூரண ஒழுங்கின்மை நெய்மர்!

எப்ஸ்டீன் கோப்புகள்! மன்னிப்பு கோரிய பிரிட்டன் பிரதமர்!

பாகிஸ்தானுடன் விளையாட முடியாதென நாங்கள் கூறவில்லை: சூர்யகுமார் யாதவ்

SCROLL FOR NEXT