இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் காவல்துறையினர் 
தமிழ்நாடு

அண்ணா யாருக்கு சொந்தம்? மணப்பாறையில் திமுக-அதிமுக மோதல்

மணப்பாறையில் முன்னாள் முதல்வர் அண்ணா எந்தக் கட்சிக்கு சொந்தம் என அதிமுக, திமுகவினர் மோதிக் கொண்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

DIN

மணப்பாறையில் முன்னாள் முதல்வர் அண்ணா எந்தக் கட்சிக்கு சொந்தம் என அதிமுக, திமுகவினர் மோதிக் கொண்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே அறிஞர் அண்ணா சிலை உள்ளது. திராவிட கட்சிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவது வழக்கம்.

வழக்கம்போல், நிகழாண்டு அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட கட்சியினர் ஊர்வலகத்திற்கு, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இதில் அண்ணா சிலை உள்ள பகுதியில் திமுகவினர் கட்சி கொடிகளை அமைத்தும், சாமியானா பந்தல் அமைத்தும் இருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த அதிமுகவினர் தங்களது கட்சி கொடியினையும், இரட்டை இலை சின்னங்களையும் சிலைக்கு அருகில் அமைத்ததால் இருத்தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அண்ணா யாருக்கு சொந்தம் என்பதில் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் நிலையில், நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார், இருவரையுமே சமரசம் செய்தனர்.

பிறந்தநாள் ஊர்வலம் நடப்பதற்கு முன்னதாகவே அண்ணா யாருக்கு சொந்தம் என்பதில் திமுக - அதிமுக கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

மெட்ராஸ் ஐஐடி-ல் புராஜெக்ட் அசோசியேட் பணி

மோடியின் தாயார் ஏஐ விடியோ: உடனே நீக்க காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT