தமிழ்நாடு

நீடாமங்கலத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில்  கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு நீடாமங்கலம்  ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கூடுதல் ஆணையர் அன்பழகன், பேரூராட்சி மன்ற தலைவர் ஆர்.ராம்ராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமுதாய வளைகாப்பில் கலந்து கொண்ட கர்ப்பிணித் தாய்மார்கள்.

குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டி.சங்கீதா வரவேற்றுப் பேசினார். நீடாமங்கலம் சப்இன்ஸ்பெக்டர் கோகிலா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சத்தியவாணன், ராஜலெட்சுமிகார்த்திகேயன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராணிசேகர், திமுக ஒன்றிய செயலாளர் ஆனந்த், வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 20 வகையான சீர்வரிசைப்பொருட்கள், ஐந்து வகையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.  விழாவில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவில் மேற்பார்வையாளர் சி.லெட்சுமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

மே 20 வரை கனமழை நீடிக்கும்: 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

அரசு நிறுவனங்களில் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமீன் மனு தள்ளுபடி

அடுத்த நிதியாண்டில் இந்தியா 4 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாகும்: பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா்

SCROLL FOR NEXT