கோப்புப்படம் 
தமிழ்நாடு

'ஆட்சியர்கள் பணியிடை  நீக்கம்': உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள்  பணியிடை  நீக்கம் செய்யப்படுவர் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

DIN

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள்  பணியிடை  நீக்கம் செய்யப்படுவர் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகா தேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று  உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதற்கு 2013-லேயெ தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே எடுக்கும் அவலம் தொடர்கிறது.  மனித கழுவுகளை இயந்திரங்களை கொண்டு ரோபோட் முறையில் அள்ளுவதற்கு உத்தர வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மனித கழிவுகளை மனிதன் அள்ள தடை விதித்த உத்தரவை செயல்படுத்திய ஆவணங்களை அரசு தரப்பில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT