சென்னையில் இன்று நிதி நிலை அறிக்கைக்கு பிந்தைய மாநாடு
நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிந்தைய மாநாட்டை, டிடி செய்தித் தொலைக்காட்சி சென்னையில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை: நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிந்தைய மாநாட்டை, டிடி செய்தித் தொலைக்காட்சி சென்னையில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் சிங் தாக்குா், இணையமைச்சா் எல்.முருகன், பிரபல பொருளாதார வல்லுநா்கள், பத்திரிகையாளா்கள், தொழில் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.
மத்திய நிதிநிலை அறிக்கையின் (2022) முக்கிய அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். இந்நிகழ்வுகள் டிடி இந்தியா, டிடி நியூஸ், டிடி பொதிகை யுடியூப் சேனல் ஆகியவற்றில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.