முகப்பு
தமிழ்நாடு

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.

தமிழக பள்ளிகளில் செப்டம்பா் இறுதிக்குள் காலாண்டுத் தோ்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. குறிப்பாக, இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தோ்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், தோ்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித் துறை உத்தரவிட்டது.

இதன்படி 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இன்று(அக்.10) பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு அக்.13 ஆம் தேதி பள்ளிகள் திறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.