முகப்பு
தமிழ்நாடு

நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறிய அமைச்சர்: காரணம் என்ன?

உரிய ஏற்பாடுகள் சரியில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியேறினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:26 AM
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
பகிர்:

உரிய ஏற்பாடுகள் சரியில்லை என்பதால் அரசு நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியேறினார்.

எழும்பூரில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் நேரடியாக 1,000 மருத்துவர், செவிலியர் கலந்து கொள்வதாக கூறப்பட்ட நிலையில் 50 செவிலியர் மட்டுமே பங்கேற்றனர்.

இந்நிலையில், செவிலியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அதிகாரிகளிடம் கோபமாக பேசிவிட்டு அரங்கிலிருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறப்பட்டுச்சென்றார்.


மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர்  மா.சுப்பிரமணியன்  பாதியிலேயே வெளியேறியதால் அதிகாரிகளும், அரங்கிலிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.